search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொடைக்கானல் அருகே மின் வேலியில் சிக்கிய கடமான் பலி
    X

    பலியான கடமான்.

    கொடைக்கானல் அருகே மின் வேலியில் சிக்கிய கடமான் பலி

    • நாய்கள் விரட்டியதால் மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மின் வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் அருகே உள்ள செம்பிரான்குளம் தனியார் எஸ்டேட்டில் அமைக்கப்பட்டு இருந்த சூரிய மின் வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் பலியானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பெரும்பள்ளம் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து போன கடமானை அதே இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர்.

    பின்னர் வனப்பகுதியில் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாய்கள் விரட்டியதால் மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே மின் வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

    Next Story
    ×