search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறையில் மழைவேண்டி பக்தர்கள் ஊர்வலம்
    X

    ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    செந்துறையில் மழைவேண்டி பக்தர்கள் ஊர்வலம்

    • செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி கோவிலை சென்றடைந்தனர்.
    • பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்தில் செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் இருந்து மகாலட்சுமி கோவில், சந்தப்பேட்டையில் உள்ள முருகன் கோவில், விநாயகர், முத்தாலம்மன் கோவில், குரும்பபட்டி வீதி, ஐயப்பன் கோவில் வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×