search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
    X

    பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

    • பாட்டிலில் பெட்ரோல் வைத்து ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 20). இவர் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் தினமும் சதீஸ்குமார் மதுக்குடித்துவிட்டு வந்து அந்த பகுதியில் பொதுமக்களை கையால் அடித்து மிரட்டுவதும், பாட்டிலில் பெட்ரோல் வைத்து ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×