search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் திருநம்பியுடன் காதல் கொண்டு மறக்க முடியாமல் தவிக்கும் இளம்பெண்
    X

    கோவையில் திருநம்பியுடன் காதல் கொண்டு மறக்க முடியாமல் தவிக்கும் இளம்பெண்

    • மனவேதனை அடைந்து இளம்பெண் கடந்த 15-ந் தேதி தற்கொலைக்கு முயன்றார்.
    • தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். பிளஸ்-2 படித்து முடித்து உள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 27 வயது திருநம்பியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் பழகி வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்து இளம்பெண் கடந்த 15-ந் தேதி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற இள ம்பெண் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னரும் அவர் திருநம்பியுடன் தொடந்து பழகி வந்தார். அவரது பெற்றோர் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் பழகுவதை நிறுத்த வில்லை.

    இதனையடுத்து இள ம்பெண்ணின் பெற்றோர் இது குறித்து மேட்டு ப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இள ம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இளம்பெண், திருநம்பியுடன் தான் செல்வேன். பெற்றோ ருடன் செல்ல மாட்டேன் என கூறி விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணை அந்த பகுதியில் உள்ள காப்ப கத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×