search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஆத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

    • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின் படி இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்தது.

    ஆத்தூர்:

    ஆத்தூரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின் படி இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் ஜெசிந்தா, சுகாதார ஆய்வாளர் சந்திர மோகன், அச்சாணி தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமு, நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன், ஸ்வஸ்திக் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், தாய் விழுதுகள் அறக்கட்டளை திட்ட மேலாளர் வினிஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு ஆஸ்பத்திரி ஐ.சி.டி.சி. ஆற்றுனர் கண்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×