search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை
    X

    பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.




    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை

    • பூமாதேவி ஆலயத்தில் ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அன்னதான பூஜை நடை பெற்றது.
    • அம்மனுக்கு 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயத்தில் ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அன்னதான பூஜை நடை பெற்றது.

    இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி, காலை 8 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் (உம்மான்) அன்னதான பூஜையும், சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை லட்சுமண சுவாமி தலைமையில் ஆறுமுகம், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தனர். பூஜையில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரிஸ் வரன், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், பூமாலட்சுமி, லட்சுமி, மாரித்தாய், மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.

    Next Story
    ×