என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
முத்துப்பேட்டையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- பேரணியானது அரசு பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வரை சென்றது.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி முத்துப்பேட்டையில் நடைபெற்றது. பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் தலைமையில் தொடங்கிய பேரணி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வரை சென்று திரும்பியது.
பேரணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயலாளர் பக்ருதீன் அஹமது, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜகபர் அலீ, மெகருன்னிசா மற்றும் பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், மேலா ண்மைக்குழு தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், கோவிலூர் பெரியநாயகி பள்ளி மாணவிகள், சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்