search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முத்துப்பேட்டையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    முத்துப்பேட்டையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • பேரணியானது அரசு பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வரை சென்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி முத்துப்பேட்டையில் நடைபெற்றது. பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் தலைமையில் தொடங்கிய பேரணி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வரை சென்று திரும்பியது.

    பேரணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயலாளர் பக்ருதீன் அஹமது, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜகபர் அலீ, மெகருன்னிசா மற்றும் பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், மேலா ண்மைக்குழு தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், கோவிலூர் பெரியநாயகி பள்ளி மாணவிகள், சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×