search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் இரவில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ: விளக்கேற்றி பெண்கள் வழிபாடு!
    X

    பிரம்ம கமலம் பூவிற்கு வழிபாடு செய்தனர்.

    வீடுகளில் இரவில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ: விளக்கேற்றி பெண்கள் வழிபாடு!

    • இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.
    • வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.

    திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி இ.பி காலனியை சேர்ந்த சமேஸ்வரி என்பவரது வீட்டில் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இவர் கடந்த 3 வருடமாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். முதல் முறையாக நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பிரம்ம கமலம் மலருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    அதேபோல் முள்ளிப்பாடி அன்னை நகரை சேர்ந்த வசந்தா மகேஸ்வரி என்பவர் கடந்த 1 வருடமாக பிரம்ம கமல செடி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பூவிற்கு விளக்கேற்றி நிறைகுட செம்பில் தண்ணீர் வைத்து வழிபாடு நடத்தினர்.

    வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    Next Story
    ×