search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோத தகராறில் மோதல் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு
    X

    முன்விரோத தகராறில் மோதல் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு

    • விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 41). ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும் தோட்டப் பட்ைட சேர்ந்த விஸ்வநாத னுக்கும் முன்விரோத தக ராறு இருந்து வந்தது. சம்ப வத்தன்று விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கபில் தேவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விஸ்வநாதன் மீது இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விஸ்வ நாதன் மற்றும் கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து விஸ்வ நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கபில்தேவ் மீதும், கபில்தேவ் கொடுத்த புகா ரின் பேரில் விஸ்வநாதன், பாவாணன் ஆகியோர் மீதும் போலீசார் தனித்தனி யாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×