search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
    X

    கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

    • சுமார் 200 ஏக்கரில் கோடை முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
    • மழையினால் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம், ராராம்புத்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் கோடை முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    தற்போது கதிர்வந்த பருவத்தில் உள்ள நெல் பயிர் எதிர்பாராமல் ஏற்பட்ட சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சாய்ந்து முற்றிலும் சேதம டைந்துள்ளது.

    இதுபோன்று அம்மா பேட்டை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×