என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வில்வித்தை, கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
- நவீன்குமார் வெள்ளி பதக்கமும், முகேஷ்குமார் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
- பள்ளி மாணவர்கள் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
திருவாரூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தென்னாசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 4 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
12 வயதுக்குட்பட்ட கட்டா மற்றும் குமுத்தே போட்டியில் மாணவன் கயவலன், 10 வயதுக்குட்பட்ட போட்டியில் மாணவன் தமிழியன் ஆகியோர் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற
சர்வதேச வில்வித்தை போட்டியில் 14 வயதுக்குட்பட்ட இந்தியன் வில் பிரிவில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் ஹர்திக்ராமன் முதலிடம் பெற்று கோப்பை யினை கைப்பற்றினார்.
மதுரையில் மதுரா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் மாணவன் கயலவன் வெண்க லப் பதக்கம், அபிஷேக் தங்கப்பதக்கமும், ஹர்திக்ரா மன் தங்கப்பதக்கம், நவீன்கு மார் வெள்ளி பதக்கமும், முகேஷ்குமார் வென்கலப் பதக்கமும் பெற்றனர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தமது வாழ்த்து க்க ளையும், பாராட்டு களையும் தெரிவித்தார்.
வில்வித்தை, கராத்தே பயிற்சியாளர் மாஸ்டர் குணசேகரன், திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் தலைவர் தாளாளர் டாக்டர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ். இ. பள்ளியின் தாளாளர் விஜயசுந்தரம், பள்ளியின் முதல்வர் ரமாபிரபா, ஆசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள், பெற்றோர்கள் என அனை வரும் சாதனை மாணவர்களை பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்