search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
    • பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது . இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கு தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி,சிதம்பரம் ,விருத்தாச்சலம், நெய்வேலி, காட்டுமன்னானர்கோவில் உட்பட 11 பஸ் டெப்போ செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இருக்கக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக 200 பஸ்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றது.

    இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ,விருத்தாச்சலம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி கிராமப்புற பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கும் கூடுதல் நேரமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் நாளை வரை3 நாட்களுக்கு கூடுதலாக தினந்தோறும் 200 பஸ்களும் தீபாவளி முடிந்து அடுத்த2 நாட்களுக்கு இதே போல் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் கூடுதலாக இயக்கப்படும் பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம் .மேலும் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது‌.
    • போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் 96 குழுவினர் இரவு நேர வாகன ரோந்து பணிகள் ஈடுபட்டு குற்ற செயல்கள் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் சமயத்தில் அந்தந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும். கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை கடத்துவதை தடுப்பதற்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாநக ராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட சரவணா நகர் பகுதியில் மாநகராட்சி சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் ரூ. 5.03 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சோ நகர், பள்ளி வாசல் தெரு, சீமான் தெரு ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூபாய் 1.27 கோடி மதிப்பீட்டில் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், திருப்பாதிரிப்பு லியூர், தானம் நகர் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், வண்ணாரபாளையம் பகுதியில் ரூபாய் 45.74 லட்சம் மதிப்பீட்டில் கே.கே.நகர் குளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா , மாநகர பொறியாளர் குருசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ், என்ஜீனியர். இவருக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் காங்கேயன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எழில் குடிபோதையில் கார் கார் மீது உரசினார்.

    காரினை சாலையோரம் நிறுத்திய சரண்ராஜ், எழிலை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
    • மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது::- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதை யும், நீர்நிலைகளில் குளிப்ப தையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும் 04142 - 220700 04142 - 23393 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார்.
    • பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப் பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் பிரியா என்ப வருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. தற்போது பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார். பின்னர் தனது மனைவி பிரியாவிடம் தீபாவளி சீட்டு கட்டுவதற்கு பணம் கேட்டதாக கூறப்படு கிறது ஆனால் பிரியா பணம் தராததால் பழனிச் சாமி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் பழனிச்சாமி தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் இன்று காலை கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கார் டிரைவரும் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
    • காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன தானங்குப்பம் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 28). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று மணிவண்ணன் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    கடலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போலீஸ்காரர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன், பாலா ஆகியோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது விபத்துல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் சீட் பெல்ட் அணிந்து கொண்டும் செல்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கி பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

    • மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
    • மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா உத்தர வின் பேரில் ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதி காரிகள் பல்வேறு முன் னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் தேவனாம் பட்டினம் சின்னத்தம்பி செட்டி தெருவில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்றார். பின்னர் வீடு வீடாக நேரில் சென்று மொட்டை மாடி போன்ற இடங்களை டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் நாள்பட்ட தண்ணீர், மழை நீர் உள்ளதா? வீடுகள் சுகாதாரமாக உள்ளதா? மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ஒரு வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி இருந்ததில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நாள்பட்ட நீரில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் என்பதால் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சுற்றுப்புறத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர் பாக குறித்து மனு கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மந்தி பாளையம் பகுதியில் புதி தாக அமைக்கப்பட்ட மனைப்பி ரிவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்க ளுக்கு குடிநீர் தொட்டி அங்க ன்வாடி மையம் அமைப்ப தற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தினை அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து அதே பகுதி யைச் சேர்ந்த திருஞான மூர்த்தி மனைவி செந்தாமரை (வயது34) தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர்பாக குறித்து மனு கொடுத்தார்.

    இதன் காரண மாக ஆத்திரமடைந்த பாவா டை மற்றும் அவரது ஆதர வாளர்க ளுடன் செந்தா மரை வீட்டிற்கு சென்று செந்தா மரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செந்தா மரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு பின் மேல்சிகிச் சைக்கு கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தாமரை புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, நாகராஜ், துரைராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அருளரசு (வயது 48). இவருக்கும் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கணேஷ் (வயது 39) என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2014 -ம் ஆண்டு கணேஷ், அருளரசை வெட்டி கொலை செய்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். பின்னர் கணேஷ் கடந்த 2015 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளியில் வந்த கணேஷ் அதன் பிறகு தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவான கணேஷை தேடி வந்தனர். கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருவதாக நீதிமன்றத்தில் கணேஷ் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து தேவையின்றி விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவு பெற்றனர். இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து கணேஷை தேடி வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கு சென்றார் என தெரியாத நிலையில் மீண்டும் அவர்களது உறவினரிடம் கேட்டபோது கணேஷ் இறந்துவிட்டதாக தகவலும் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    இதில் கணேஷ் உறவினர்கள் திருமண பத்திரிக்கையில் கணேஷ் பெயர் இடம் பெற்றது. ஆனால் அதில் இறந்தது போல் எந்த தகவலும் பதிவு செய்யவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து கணேஷ் உறவினர்களின் போன் நம்பரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதில் ஒரு நம்பருக்கு அடிக்கடி ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக குறிப்பிட்ட நம்பரை கண்காணிக்க தொடங்கினர். மேலும் அது யாருடைய நம்பர்? அவர் யார்? என்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அந்த நம்பரை பயன்படுத்தி வந்தது கணேஷ் என்பது உறுதியாக தெரிந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் ரகசியமாக கடந்த6 மாதமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றிருந்ததும், அதன் மூலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததும் போலீசாருக்கு உறுதியாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேஷ் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொலை வழக்கு கைதியான கணேஷை போலீசார் பிடித்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினர்.

    ×