search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

    • அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும்.
    • தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய மல்யுத்த வீராங்க னைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியுள்ள அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிட்ஜ் பூசன் சரண்சிங் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பா ட்த்தி னை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பா ட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

    கோரிக்கைகளை விளக்கி கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாதர் சங்க மாவட்ட தலைவர் தனசீலி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் ராஜலெட்சுமி, மீனா, சந்திரகலா, பானுமதி, சிலம்பரசி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பிரகாஷ், சந்தோஷ், அருள்மொழி ஈசுவரன், கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பிரபாகர், துணை செயலாளர் முத்துக்குமரன், மூத்த தலைவர் கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×