search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சக்திமலை முருகன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
    X

    சக்திமலை முருகன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

    • முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது.
    • டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.

    அரவேனு,

    கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாளையொட்டி பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றதுடன், கோவிலில் முருகக் கடவுளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கொண்டாட்டங்கள் தடபுடல்படும்.

    வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம். இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. அப்போது டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது கோவிலில்,ஐந்து முக விளக்கு ஏற்றி, அதில் 5 வித எண்ணை ஊற்றி, 5 வகை புஷ்பம் சமர்ப்பித்து, சுவாமிக்கு 5 வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் ளை படைத்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது.

    இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×