search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • 1141 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்
    • 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள சந்து கடை நடத்தும் ராதா(55) என்பவரின் வீட்டிற்கு சென்று மது வாங்கி உள்ளார்.

    அப்போது மூடியை திறந்தவுடன் ஒரு விதமான நாற்றம் அடித்ததால் இதுகுறித்து ராதாவிடம், செல்வம் கேட்டுள்ளார். நன்றாக போதை ஏறும் குடி என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் தலைசுற்றி, மயக்கம் அடைந்து வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் தலைமையிலான போலீசார் மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்று ராதாவின் வீட்டை சோதனையிட்டனர்.

    சோதனையில் அரசு மதுபான கடையிலிருந்து 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர். அதேபோன்று பாலக்கோடு அருகே உள்ள வெளங்காடு பகுதியில் மது பாட்டில் விற்கபடுவதாக வந்த தகவலின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வைத்து ஒரு நபர் மது பாட்டில் விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பொன்முடி (51) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் வைத்திருந்த மதுபாட்டில்கள் 31 மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோன்று ஓகேனக்கல் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மாதேஷ் (27) என்பவர் மது விற்று கொண்டிருந்தார் .அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அறுமுகம் (வயது 73). இவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணை பிறகு ஆறுமுகத்திற்கு, கடந்த 2019-ம் ஆண்டு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அதன்படி அவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். வயது முதுமை காரணமாக ஆறுமுகத்திற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயில் மருத்துவமனை யிலேயே சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி உடல் நிலை மோசமானதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
    • பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    அரூர்:

    தருமபுரியில் இருந்து கோவைக்கு வெடிெபாருட்கள் ஏற்றி செல்வதாக சேலம் மாவட்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று கருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதனை ஓட்டி வந்த டிரைவர் இளையராஜா (33) என்பவர் 2 ஆயிரத்து 953 கிலோ வெடி பொருட்கள் இருந்தது. வெடி பொருட்களை தருமபுரியில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (35) என்பவரும், அரூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின்படி மினிலாரியில் 2 ஆயிரத்து 953 கிலோ வெடிபொருட்களை பென்னாகரத்தில் இருந்து ஏற்றி கொண்டு கோவைக்கு சென்றதாக கைதான இளையராஜா போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள கார்த்திக்கை பிடிக்க வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரும் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைமறைவாக உள்ள 2 பேரையும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வெடிபொருட்கள் ஏற்றி சென்றதாக கூறப்படும் பென்னாகரத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்

    வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

    தருமபுரி பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்ப டுத்தப்படும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மலைவேம்பு, தேக்கு, வேம்பு மற்றும் பூவரசு மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் இலவசமாக விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்பட உள்ளது.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கப்பெறும் நீரினை பயன்படுத்தி பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு சுலபமாக பராமரித்திடலாம். நூறு சதவீத மானியத்தில் மரக்கன்றுகளை பெற ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், கணினி சிட்டா மற்றும் அடங்கல் நகல் புகைப்படம் ஒன்று.

    இந்த ஆவணங்களை வழங்கி தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் பதிவு செய்து கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    • தருமபுரியில் தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து வருகிறது
    • உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகம் உள்பட தென்னிந்தியாவில், பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது.

    அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் சமையலுக்கு முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    தருமபுரி காய்கறி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நாட்டு பூண்டு ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய பூண்டு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல் பூண்டு ரூ 160 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இரண்டு மாதத்தி ற்கு மேலாக பூண்டு விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

    வரத்து குறைவால் தருமபுரி உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    உச்சத்தைத் தொட்டு வரும் பூண்டு விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், இல்ல த்தரசிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தருமபுரி அருகே வன விலங்களை வேட்டையாடியவர் சிறையில் அடைப்பு
    • வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கணவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(50). விவசாயி. இவர் தேங்கல்மேடு, கரடு, எருது கூட அள்ளி, கணவன அள்ளியை ஒட்டியுள்ள வன பகுதிகளில் இரவு நேரங்களில் முயல் ,காட்டு பன்றி, காடை, கெளதாரி, கீரிபிள்ளை உள்ளிட்ட வன விலங்குகளை நாட்டு வெடி, கூண்டு, கம்பி வலை போன்றவற்றின் மூலம் வேட்டையாடி வந்துள்ளார்.

    நேற்று கணவனஅள்ளி அருகே உள்ள வனப் பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி மற்றும் வலையுடன் நின்றிருந்தவர் வன காவலர்களை கண்டதும் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் வன விலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.

    அவரை பிடித்து சென்று அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி, நாட்டு வெடி, மற்றும் உப்புக்கறி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த வன துறையினர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தருமபுரி அருகே போதிய கழிப்பறை வசதியின்றி பள்ளி மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கின்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மண அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகும்பு வரை சுற்று பகுதிகளில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த சுமார் 260 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

    படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த போதிய பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க படாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் மாணவ, மாணவிகள் கழிப்பிடம் செல்லும் பகுதியில் சுகாதார மற்ற முறையில் புதர் மண்டி இருக்கும் நிலையில் விஷ ஜந்துக்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கீன்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.பள்ளியில் பல்வேறு பராமரிப்பு வேலைகள் செய்யபடாமல் உள்ளதால் பள்ளியில் படிக்கும் கிராமப் பகுதி மாணவ, மாணவியர் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

    மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியமாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீது கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சித்தார்.
    • நிலப்பிரச்சனையால் சம்பவம்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வசித்து வருகிறார். ராஜகோபால் விவசாய நிலத்திற்கு அருகில் அரசு ஓடை புறம்போக்கு இருந்து வந்துள்ளது.

    இந்த ஓடை புறம்போக்கு வழியாக தனது விவசாய நிலத்திற்கு காலகாலமாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், குமார், சுரேஷ், பொன்முடி, மகேந்திரன் ஆகியோர் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ராஜ கோபால் வயலுக்கு செல்ல வழி விடாமல் மிரட்டி வரு வதாக கூறப்படுகிறது.

    மேலும் விவசாய நிலத்தி ற்கு வழி விடாமலும், வயதான நிலையில் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் வழியில்லாமல் ராஜ கோபால் குடும்பத்தகனர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தி ருந்தார்.

    அப்பொழுது திடீ ரென மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து, உடலின் மீது ஊற்றி தற்கொலை செய்வதற்கு முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தருமபுரி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியானர்.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போது விபத்து

    தருமபுரி மாவட்டம் சோகத்தூர் அருகேயுள்ள கீழ்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(36) விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(32) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் வாசுதேவன் பச்சினம்பட்டியில் உள்ள தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ராஜேஸ்வரியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மனைவியே அங்கு இருக்க சொல்லி விட்டு மீண்டும் தனது ஊரான கீழ்நாயக்கன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலையில் உள்ள தனியார் பேட்ரொல் பங்க் அருகில் வந்தபோது பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த அரசு பஸ், வாசுதேவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் துக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வாசுதேவனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு வாசுதேவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாசுதேவன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தருமபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • தருமபுரி அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டில் உள்ளது.
    • உள்நோயாளிகள் பீதியில் உள்ளனர்

    தருமபுரி சேலம் பை-பாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி வளாகம், அவசர சிகிச்சை பிரிவு , உள்ளிட்ட பகுதிகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ளதால், சிகிச்சைக்கு வருபவர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி அரசு மருத்து வக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் பிரசவம், விபத்து சிகிச்சை உட்பட, பல்வேறு சிகிச்சைகளுக்கு இங்கு உள்நோயாளிகள் மட்டும் இன்றி, புறநோயாளிகளாக தினந்தோறும், 2000 க்கும் மேலானோர் வந்து செல்கின்றனர்.

    1200 படுக்கை வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டில் முக்கி யத்துவம் வாய்ந்த, தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பிரசவ வார்டு மற்றும் பார்வையா ளர்கள் காத்திருப்பு அறை அருகே உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில தினங்களுக்கு முன் சேதமடைந்தது.

    மேலும், 500 படுக்கை அறைகள் கொண்ட பிரதான கட்டடத்தில் உள்ள கழி வறை குழாய்கள் சேதமடைந்துள்ளதுடன், கழிவறைகளில் இருந்து நேரடியாக குழாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மேலும், தற்போது மழை காலமாக உள்ளதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. சேதமான சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், கழிவறைகளில் இருந்து கழிவு நீர் கட்டடத்தில் மீது வெளியேறுவதை தடுக்க, தருமபுரி மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் உள்ளது.

    மேலும் அவசர சிகிச்சை பிரிவு அருகே பொதுமக்கள் காலணி விடும் இடத்தில் எலிகள் ஓடி விளையாடி துர்நாற்றம் வீசி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உயிருக்கு அபாயம் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மட்டும் இன்றி, கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

    இதனால், இங்கு சிகிச்சை பெற வருபவர்கள் மட்டும் இன்றி, அவர்களை காண வருபவர்களுக்கும், பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தருமபுரி அரசு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகள், கழிவு நீர் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தருமபுரி அருகே மின் செயலி பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பனியாளர்கள் பங்கேற்பு

    மின்சார வாரியம் சார்பில், புதிதாக நிறுவப்பட்டுள்ள உன் பாதுகாப்பு உன் கையில், என்ற பாதுகாப்பு மின் செயலி குறித்து மின்வாரிய களப்பணியாளர்களுக்கான, நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் முன்பு நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு உதவி செயற்பொறியாளர் இந்திராணி தலைமை தாங்கி, உன் பாதுகாப்பு உன் கையில், என்ற பாதுகாப்பு மின் செயலி குறித்த செயல்பாடுகள் பற்றி, மின்வாரிய களப்பணியாளர்களிடம் நேரடியாக விளக்கமளித்தார்.

    பின்னர் அவர் மின்தடை, மின் நீட்டிப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ளும் போது, பணியாளர்கள் கவனத்துடன் இடுப்பு கயிறு, கையுறை அணிந்து பாதுகாப்புடன் பணி செய்யும் முறைகள் குறித்தும், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்தும், விரிவாக அவர் எடுத்து கூறினார். இதில் உதவி பொறியாளர்கள் பசுபதி, பாலமுரளி, ஸ்ரீதர் அமல்நாதன் உள்ளிட்ட அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×