search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபத்திர மகாகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    கோப்புப்படம்

    வீரபத்திர மகாகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.
    • தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவாரூர்:

    குடவாசல் அருகே சீதக்கமங்கலத்தில் வீரபத்திர மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழாவுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 18-ந் தேதி நடந்தது. அதையடுத்து தினசரி அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

    நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் திருமலைராஜன் ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கிருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோவில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×