search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. உறுப்பினர் படிவங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி
    X

    தி.மு.க. உறுப்பினர் படிவங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி

    • ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்கிற “தொண்டர்களாய் ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.விடம், நகர செயலாளர் நவாப் ஒப்படைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளையொட்டி ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்கிற "தொண்டர்களாய் ஒன்றிணைவோம்" என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதில் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் 65 சதவீத உறுப்பினர் படிவங்களை நேற்று மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.விடம், நகர செயலாளர் நவாப் ஒப்படைத்தார்.

    அப்போது மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினரும், நகராட்சி தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், நகர அவைத்தலைவர் மாதவன், துணை செயலாளர்கள் பொன்.குணசேகரன், அரங்கண்ணல், மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி நகர மன்ற உறுப்பினர் வேலுமணி, வட்ட செயலாளர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×