என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஊட்டியில் குடிநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடந்தது
- மாணவ-மாணவிகள் பதாகைகளுடன் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், நீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வழங்கி னார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்று நிறைவடைந்தது. இதில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 85 மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட 100 பேர் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்து றையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்ப டங்களை பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு வாக னத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனத்தின் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுதாகர், உதவி பொறியாளர் சங்கீதா, துணை நிலநீர் வல்லுநர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்