search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
    X

    ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்

    • அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
    • பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் குருவ ரெட்டியூர், கரடிப்பட்டியூர், தண்ணீர்பந்தல் பாளையம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

    நாங்கள் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை முதலீடு செய்து கதலி ரக வாழையை பயிரிட்டோம். அடுத்த மாதம் அறுவடைக்கு தயா ராக உள்ள நிலையில் திடீரென மழை பெய்து எங்கள் வேளாண்மையை சேதப்படுத்தி விட்டது.

    இதனால் ஒரு வருட பயிரான வாழையை பாதுகாத்து வந்த நிலையில் திடீரென மழைக்கு சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை வரும் வருமானம் பறிபோனது.

    எனவே அரசு நிர்வாகம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட எங்கள் விவசாயத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    Next Story
    ×