search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாராஜாநகர் உழவர் சந்தையில்  வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி
    X

    வியாபாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்ட காட்சி.

    மகாராஜாநகர் உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி

    • சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த காய்கறி மற்றும் பழ சந்தைகளை டெல்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அதில் சிறந்த சந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறது.
    • விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு பொருட்கள் விற்பனை செய்து உழவர் சந்தை வளாகத்திலேயே பதிவு சான்றிதழ் வழங்கினர்.

    நெல்லை:

    சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த காய்கறி மற்றும் பழ சந்தைகளை டெல்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அதில் சிறந்த சந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறது. நெல்லையில் மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தை சிறந்த முறையில் உழவர்கள் கொண்டுவரும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் சந்தையாக செயல்பட்டு வருகிறது.

    இதையடுத்து வேளாண் இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹாராஜா நகர் உழவர் சந்தையில் நிர்வாக அலுவலர் பாப்பாத்தி மேற்பார்வையில் உழவர் சந்தையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் பாளை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு பொருட்கள் விற்பனை செய்து உழவர் சந்தை வளாகத்திலேயே பதிவு சான்றிதழ் வழங்கினர்.

    Next Story
    ×