search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் வட்டார பகுதிகளில் கிராமசபை கூட்டங்கள்
    X

    போடிகாமன்வாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் வட்டார பகுதிகளில் கிராமசபை கூட்டங்கள்

    • கூட்டத்தில், சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இதில் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே, பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் நேற்று காந்திஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு அறிவித்துள்ள பல்வேறு தீர்மானங்கள் மற்றும் குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் வட்டாரம் பாளையங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    போடிகாமன்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடி தண்ணீர், சுகாதாரம் உள்பட முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு, தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் தனபாக்கியம், ஊராட்சி செயலர் சேசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மலைச்சாமி, ஊராட்சி செயலர் (பொறுப்பு) நடராஜ், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பாறைப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் துணைத்தலைவர் சுருளியம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வீரக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் யூசின்ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜான் கென்னடி, ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பித்தளைப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தலைவர் மயில்சாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி செயலர் கண்ணையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், துணைத் தலைவர் கவிதா, ஊராட்சி செயலர் அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள முக்கிய தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மலர்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜோதி மயில்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி செயலர் சிவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேவரப்பன்பட்டி ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மாரிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரிதிவிராஜன், ஊராட்சி செயலர் மணவாளன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×