search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டமன்ற குழுவுக்கு குறைகளை மனுக்களாக அளிக்கலாம்; கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தீபக் ஜேக்கப். 

    சட்டமன்ற குழுவுக்கு குறைகளை மனுக்களாக அளிக்கலாம்; கலெக்டர் தகவல்

    • மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
    • மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையின் 2023-2024-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது.

    இதனையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் அல்லது குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப்பே ரவை, சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும்.

    ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்கண்டவைகளாக இருத்தல் கூடாது:-

    தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டு தல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல், சட்ட மன்றப்பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொ ள்ளப்படும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும். ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொ ள்ளப்படும்.

    அப்போது மனுதாரர் முன்னிலையில், குழுக்கூட்ட த்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுவில் உள்ள பொருள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும்.

    20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொ ள்ளப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×