என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோத்தகிரியில் தேசிய பழங்குடியின ஆணைய குழுவினர் ஆய்வு
- கோத்தகிரி ஜி.டி.ஆர் நடுநிலை பள்ளி செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்
- பழங்குடியினர் வசிப்பிடங்களில் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேசிய பழங்குடியின தலைவர் ஆனந்த் நாயக் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடம் மற்றும் அவர்களின் கல்வி. வாழ்வியல் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
ஆனணயத்தின் செயலர் அல்காதிவாரி, இணை செயலாளர் தவுதங், துணை இயக்குநர் தூபே, ஆய்வு அலுவலர் ஆர்.எஸ்.மிஸ்ரா, ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இந்த குழுவினர் கோத்தகிரியில் உள்ள ஜி.டி.ஆர் நடுநிலை பள்ளி அவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள மாணவர்களையும் நேரில் சந்தித்து, பேசி, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.
பின்னர் குஞ்சப்பனை கோழிக்கரை பழங்குடியினர் வசிப்பிடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் தேசிய பழங்குடியின ஆனணயத்தின் தலைவர் ஆனந்த் நாயக் தலைமையிலான குழுவினர் பழங்குடியின தலைவர்களிடம் கலந்துரையாடினர். தொடர்ந்து அங்கு நடந்த பழங்குடியினர் கலைநிகழ்ச்சியையும் பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரிய தர்சினி, மாவட்ட ஊராட்சி ஒன்றியதலைவர் பொன் தோஸ், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்