search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா
    X

    அ.தி.மு.க. வினர் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா

    • ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மற்றும் மாநகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×