search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மளிகை கடைக்காரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    மளிகை கடைக்காரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • ஆனந்தகுமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அந்த பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார்.
    • ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 54). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஆனந்தகுமார் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அந்த பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். செல்லும் போது சாவியை வீட்டின் முன்பு இருந்த இரும்பு கட்டிலில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க செயின், 4 கிராம் கம்மல், 2 கிராம் மோதிரம் உள்பட 10¾ பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    பிரார்த்தனை முடிந்ததும் ஆனந்தகுமார் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சிங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக்க டைக்காரர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகி றார்கள்.

    Next Story
    ×