search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கடை தொழிலாளி கழுத்தறுத்து தற்கொலை
    X

    நகை கடை தொழிலாளி கழுத்தறுத்து தற்கொலை

    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
    • ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ்.கே.ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40).

    நகை கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று நேற்று காலை தனது கழுத்தை தனக்கு தானே அறுத்து கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×