search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டச்சு படையை வென்ற 281-வது ஆண்டு தினம்
    X

    டச்சு படையை வென்ற 281-வது ஆண்டு தினம்

    • குளச்சல் கடற்கரையில் போர் வெற்றி தூணுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
    • ராணுவ வீரர்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தக தலமாக விளங்கியது. இதனை அறிந்த டச்சு படையினர் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டனர். அதைத்தொடர்ந்து திருவி தாங்கூர் மகாராஜா மார்த் தாண்ட வர்மா படை தளப திகளுடன் குளச்சல் கடற்க ரைக்கு வந்தார்.

    திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. 2 மாதங்கள் நடந்த இந்த சண்ைட 1741 ஜூலை 31-ந்தேதி முடிவுக்கு வந்து திருவிதாங்கூர் படை டச்சு படையை வென்றது. இதற்கு குளச்சல் மீனவர்கள் மன்ன ருக்கு பெரும் உதவிகள் செய்தனர். போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றி தூண் ஒன்றை நிறுவினார். இந்த தூண் மீது அமைந் துள்ள சங்குதான் இன்றும் குளச்சல் நகராட்சியின் முத் திரையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த போர் வெற்றி தூண் வளாகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. போர் வெற்றியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க்காட்சிகளை விளக்கும் வகையில் சுவரில் படைப்பு சித்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றித்தூணில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் (திருவனந்தபுரம் பாங்கோடு) சார்பில் கடந்த சில வருடங்களாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    டச்சு படையை வென்ற 281-வது ஆண்டை யொட்டி, இன்று (சனிக் கிழமை) காலை 10.30 மணிக்கு வெற்றி தூணுக்கு வீரவணக் கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவனந்தபுரம் பாங்கோடில் உள்ள மெட் ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

    Next Story
    ×