search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி - நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைதம்பி திறந்துவைத்தார்
    X

    குழித்துறையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி - நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைதம்பி திறந்துவைத்தார்

    • இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பொருட் காட்சி நடைபெறவில்லை
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்

    கன்னியாகுமரி :

    குழித்துறையில் ஆண்டு தோறும் ஆடி அமாவா சையை ஒட்டி குழித்துறை நகராட்சி சார்பில் பொருட் காட்சி நடைபெற்று வரு கிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பொருட்காட்சி நடைபெறவில்லை.இவ்வாண்டு நடைபெறும் 97-வது வாவுபலி பொருட்காட்சி நேற்று மாலை தொடங்கியது. பொருட்காட்சி மைதானத் தில் உள்ள வி.எல்.சி திருமண மண்டபத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    தலைவர் பொன். ஆசைதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழாவிற்கு தலைமை வகித்தார். ஆணையாளர் ராமத் திலகம், என்ஜினீயர் பேரின்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பிரவீன் ராஜா, சுகாதார அலுவ லர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர் குரு சாமி, பொருட்காட்சி காண்ட்ராக்டர் பால்ராஜ், வேளாண்மை இணை இயக் குனர் அவ்வை மீனாட்சி, உதவி இயக்குனர் சந்திர போஸ் கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லீன்கெனில், விஜு, விஜயலட்சுமி, மினி குமாரி, ரவி, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ஜூலியட் மெர்லின் ரூத், பெர்லின தீபா, லில்லி புஷ்பம், ரீகன், ரெத்தினமணி, அருள் ராஜ், ஜலீலா ராணி, சர்தார் ஷா, செல்வகுமாரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மரணக் கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்கு கள், மாயக்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்த மான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகைகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்களின் படைப்பு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பல மரச்சீனி, வாழைக்குலை, கிழங்கு வகைகள் உட்பட ஏராளமான பொருட்களை வளாகத்தினுள் பார்வைக்கு வைத்துள்ளனர். களியக் காவிளை மற்றும் மார்த் தாண்டம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×