search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

    • பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், காவலன் செயலி மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
    • பெண்களுக்கு மிகவும் உதவியாக தொடங்கப்பட்டதுதான் காவலன் செயலி. இதை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள கடிய பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், காவலன் செயலி மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    முகாமிற்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்தை யன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் முகாமை தொடங்கி வைத்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்கு மிகவும் உதவியாக தொடங்கப்பட்டதுதான் காவலன் செயலி. இதை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இதனை அனைத்து குற்ற செயல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உடனடியாக அதற்கான தீர்வு கிடைக்க வழிவகை செய்கிறது இந்த செயலி. மேலும் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    இதை மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்த கூடாது. பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். முகாமில் போலீசார், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் போலீஸ் நிலைய நடைமுறைகள், செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொண்ட னர். முன்னதாக போதைப் பொருள் பயன் பாட்டிற்கு எதிரான உறுதி மொழியினை பள்ளி வளாகத்தில் மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×