search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக பெண் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு
    X

    திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக பெண் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு

    • பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம்
    • தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே அயனிவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ஐரிஸ் (வயது 42). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஐரிஸ் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த ராஜன் (43) என்பவருக்கும், ஐரிஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் இருக்கும்போது ராஜன் வீட்டின் முன்பக்கம் வந்து நின்று அவதூறாக பேசி கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கல்லால் தாக்கியதில் ஐரிசுக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஐரிஸ் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப்ப திவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×