search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.93 ஆயிரம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.93 ஆயிரம் வசூல்

    • அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்
    • உண்டியல் எண்ணும்பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சுஜித், கோவில் பொருளாளர்கண்ணதாசன், கணக்காளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும்பணி யில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.93ஆயிரத்து39வசூல்ஆகி இருந்தது.

    Next Story
    ×