search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை: பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
    X

    தக்கலை: பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

    • சிக்கன் மற்றும் மட்டன் கடைகளில், பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு
    • 13 கடைகளில் ஆய்வு செய்வதில், சுமார் 6 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் தக்கலை பகுதிகளில், ஆணையாளர் லெனின் உத்தரவின் பேரில், சிக்கன் மற்றும் மட்டன் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்கின்ற ஆய்வு நகராட்சி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் ஆகியோர்கள் தர்கா ரோடு பகுதிகளில் உள்ள சிக்கன் மற்றும் மட்டன் உள்ளிட்ட 13 கடைகளில் ஆய்வு செய்வதில், சுமார் 6 கிலோ அளவுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன், சிவக்குமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×