search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரை மண்வளம் காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
    X

    கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரை மண்வளம் காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

    • ஈசா யோகா மையம் சார்பில்"மண்வளம் காப்போம்" என்ற கருத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு
    • ஈஷா யோகா நிர்வாகி தினேஷ் முன்னிலையில் இந்த இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்துபுறப்பட்டது

    கன்னியாகுமரி :

    ஈசா யோகா மையம் சார்பில்"மண்வளம் காப்போம்" என்ற கருத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரை சென்று விட்டு திரும்பி மீண்டும் கன்னியாகுமரி வந்தடையும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியின் தொடக்க விழாகன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவடிவாள் தலைமையில் ஈஷா யோகா நிர்வாகி தினேஷ் முன்னிலையில் இந்த இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்துபுறப்பட்டது. அவர்கள் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழிவழியாக தூத்துக்குடிசெல்கிறார்கள். அங்கு அவர்கள் இரவு தங்குகிறார்கள். இன்று காலை தூத்துகுடியில்இருந்து புறபட்டு திருச்செந்தூர், உவரி, கூடன்குளம், செட்டிகுளம் வழியாக இன்றுமாலை கன்னியாகுமரி வந்தடைய உள்ளார்கள்.

    Next Story
    ×