என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருவட்டார் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- சர்க்கரை நோய் குறையாததால் பெரிதும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவதாஸ் நேற்று மரணம்அடைந்தார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே கேசவபுரம், திருவரம்பு பகு தியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது67) இவரு க்கு மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார்கள்.
தேவதாஸ் சர்க்கரை நோயால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவருடைய 2 கண்களும் பார்வை குறைந்து வந்தது. அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சர்க்கரை நோய் குறையாததால் பெரிதும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தேவ தாஸ் விஷம்குடித்து மயங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி படுத்து இருந்தார். இதனை பார்த்த மனைவி, மகனுக்கு தகவல் கொடுத்தார்.
மகனும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவதாசை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சை க்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவதாஸ் நேற்று மரணம்அடைந்தார்.
தேவதாஸ் மனைவி ராஜம் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்