search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்ற காட்சி.

    ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில்‌ ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
    • இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில் ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ஓங்காளியம்மன்,ஸ்ரீ மகா கணபதி, ஹீ சப்த கன்னிகள், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது 2 கருடன்கள் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தன. கும்பாபிசேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மண்டல அபிஷேகம் தொடங்கியது.

    Next Story
    ×