search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    லாட்டரி சீட்டு விற்றவர் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    • லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த போது போலீசாரிடம் சிக்கினார்.
    • திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டு சிலர் விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் அதே பகுதியில் உள்ள குரவஞ்செட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பழனித்துரை (வயது 41) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தபோது கையும்களவுமாக சிக்கினர்.

    இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×