search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    8 கிலோ கஞ்சா பறிமுதல்; சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது
    X

    8 கிலோ கஞ்சா பறிமுதல்; சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது

    • 8 கிலோ கஞ்சா பறிமுதல்; சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சம்பவத்தன்று எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    மாடக்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு கும்பல் மறைந்திருந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். இதைப்பார்த்து உடனே போலீசார் அவர்களை துரத்தினர். இதில் 5 பேர் பிடிபட, 2 பேர் தப்பினர்.

    சிக்கிய 5 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் 7 கிலோ 700 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் புது ஜெயில் ரோட்டை சேர்ந்த சகோதரர்களான ஜாக்கி என்ற பிரசாத் (வயது22), பாண்டியராஜன் (23) மற்றும் திருப்பாலை அன்பு நகர் முருகன் மகன் முத்துகிருஷ்ணன் (24), வில்லாபுரம் உருவாட்டி மகன் ஈஸ்வரன் 35, ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணியன் (24) என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×