search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எச்.ராஜாவிற்கு அட்சய சேவா ரத்னா விருது
    X

    எச்.ராஜாவிற்கு அட்சய சேவா ரத்னா விருது

    • பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
    • தினமும் 300 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்கிற அமைப்பு தொடங்கி கடந்த 762 நாட்களாக ரோட்டோ ரத்தில் உள்ள வரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 300 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.

    அட்சயப்பாத்திரம் அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வருகை தந்தார். அங்கு அவர் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்டு பாராட்டி னார். அவருக்கு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு அட்சய சேவா ரத்னா என்கிற விருது வழங்கி கவுரவித்தார்.

    பிறகு அவர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் சிலை மற்றும் பாதுகைக்கு வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர்கள் சிவ பிரபாகரன், சசி குமார், சசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×