search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்மொழியே செம்மொழி புத்தக வெளியீட்டு விழா
    X

    "எம்மொழியே செம்மொழி" புத்தக வெளியீட்டு விழா

    • சி.இ.ஓ.ஏ. கல்விக்குழும நிறுவனர் எழுதிய “எம்மொழியே செம்மொழி” புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
    • ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை சி.இ.ஓ.ஏ கல்விக்குழுமத்தின் நிறுவனர் மை.ராசா கிளைமாக்சு எழுதிய "எம்மொழியே செம்மொழி" என்ற புத்தக வெளியீட்டு விழா கோசாகுளத்தில் உள்ள சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பாவாணர் அரங்கத்தில் நடந்தது. சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழத்தின் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை மதுரை யாதவர் ஆண்கள் கல்லூ ரியின் முதல்வர் நாரா யணன் பெற்ற க்கொண்டார். சி.இ.ஓ.ஏ. பதின்மபள்ளி துணை முதல்வர் மஞ்சுளா அறிமுக உரையாற்றினார். மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் தகைசால் பேரா சிரியர் நிர்மலா மோகன் நூலாய்வு உரையாற்றினார். சவுராஷ்டிரா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் சித்ரா, அமெரிக்கன் கல்லூரி உதவி பேராசிரியர் எஞ்சலின் தங்கக்கனி ஆகியோர் பேசினர்.

    முனைவர் மை. ராசா கிளைமாக்சு ஏற்புரை வழங்கினார். இந்த விழாவில் சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் நிர்வாகக்குழுவினர், முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×