search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் ேசாழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கேடயத்தில் எழுந்தருளிய அம்மன் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பக்தி கோஷம் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வந்த தேரை திரளாேனார் கண்டு தரிசனம் செய்தனர்.

    கடை வீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை சோழ வந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×