search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
    X

    சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

    • சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் விஸ்வா (வயது24). கரும்பாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் உதயா (30). இவர்கள் கரும்பாலை ஆட்டோ நிறுத்தத்தில் நின்ற போது விசுவாவின் நண்பரிடம் உதயா சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உதயா கத்தியால் விஸ்வாவின் நண்பரை குத்தமுயன்றார். இதை தடுக்க முயன்ற விஷ்வாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.

    Next Story
    ×