search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
    • விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974-ம் ஆண்டு வரை 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பசுமையான காடுகளாக இருந்தன. இவை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குளங்களுக்கு நீராதாரமாக விளங்கியதோடு, விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது. ஆனால் 1974-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வணிக நோக்கில் யூகலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழக வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.

    இந்த மரங்களை வளர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கிராமங்களில் உள்ள கண்மாய் குளம் நிறையாமல் விவசாயம் தடைபடுகிறது.

    இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது.

    ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நகர் மயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்தால் தான் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது.

    நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம்.

    காகித ஆலை வேண்டுமா, உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால், இதற்காக ஆங்காங்கே ஏற்படுத்தும் தடுப்புகளால், சமவெளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.
    • ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.

    பாராளுமன்ற மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,

    மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் என்றும் தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்,

    இன்று மக்களவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.

    அவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது "ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் தொழிற்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுவிட்டது விரைவில் சரிசெய்து பணிகளை துவக்கிவிடுவோம்" என்றார்.

    மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பணிகளில் மட்டும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படக்காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது.
    • கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், இருவர் மீட்பு என்ற நிகழ்வுகள் மிகவும் கண்டனத்துக்குரிய சம்பவங்களாகும். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் கொடுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதற்கு நிரந்தர தீர்வு காண புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு எங்களது உரிமை என்று குரல் எழுப்பி, கச்சத்தீவை தாரை வார்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் அம்மா, பல்வேறு உச்ச நீதி மன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி அ.தி.மு.க.வை வாதியாக சேர்த்தார். தொடர்ந்து வருவாய்த் துறையையும் இதிலே ஒரு வாதியாக சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் இதை செயல் படுத்தினார்.

    கச்சத்தீவை மீட்டெடுத்தால் தான் நம்முடைய மீனவர்களுடைய வாழ்வாதாரமும், மீனவருடைய எதிர் காலமும் பாதுகாக்கப்படும். அதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை அம்மாவும், அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் நடத்தி வந்தார்கள்.

    கடந்த 2019 ஆண்டில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இலங்கை கடற்படை படகு மோதி இன்றைக்கு மீனவர்கள் உயிரிழக்கிறார்கள் என்று சொன்னால் நம்முடைய உரிமையை மீட்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அன்றாடம் கடலுக்கு சென்றுதம் உயிரை பணயம் வைத்து அவர்கள் பிடித்து வருகிற மீனை இங்கே பல்வேறு தடைகளைத் தாண்டி அதை விற்பனை செய்து அதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிற அந்த மீனவர்களுக்கு இந்த அரசு கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

    மீனவர் உயிர் என்பது நாம் எளிமையாக கடந்து போய்விடக் கூடாது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையிலே இப்படி உயிரைப் பறிக்கிற சம்பவங்கள் கடலுக்குள்ளே நடைபெறுவதை இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது.

    ஒட்டுமொத்த மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. எப்பொழுது எல்லாம் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கிறதோ அப்பொழுதெல் லாம் இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு வீழ்த்தப்படுகிற இந்த துயர சம்பவம் தொடர்ந்து கொண்டே இருப்பதை வரலாறு நமக்கு நினைவூட்டினாலும், இனி வருகிற காலங்கள் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு இதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இவ்வாறு பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என மனுதாரருக்கு தெரியாதா? .
    • பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது.

    பட்டியலின மக்களுக்கு எதிராக எஸ்.சி./எஸ்.டி. கருத்துகளை பேசியதாக திருச்சி மாவட்ட காவல்துறை வன்கொடுமை தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "சாட்டை முருகன் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் இதுபோன்று தொடர்ந்து அவதூறு கருத்துகளை பேசி வருகிறார்.

    இதுபோன்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி, இனிமேல் இதுபோன்ற பேசமாட்டேன் என உத்தரவாத பத்திரம் வழங்கி ஜாமின் பெற்றார். அதை மீறி தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் ஜாமின் வழங்க உத்தரவிடக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி "மனுதாரர் ஏற்கனவே தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தபோது இதுபோன்ற அவதூறு கருத்துகளை பதிவிடமாட்டேன் என உத்தரவாத பத்திரம் வழங்கப்பட்டது.

    அதன்பின் மனுதாரர் இவ்வாறு பேசி வருகிறார். அரசியல் கட்சியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என மனுதாரருக்கு தெரியாதா? பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை மனுதாரர் புரிந்து கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசி யூடியூபில் பதிவவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் கூடுகிறது. பணமும் குவிகிறது. யூடியூபில் பணம் சம்பாதிக்க மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பேச்சு இருக்கிறது. யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இனிமேல் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யமாட்டேன் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    அதற்கு சாட்டை துரைமுருகன் சார்பில சம்மதம் தெரிவிக்க கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்தார்.

    • சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு.
    • உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் அப்பில் புகார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சட்டக் கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று இரவு பார்சலில் சிக்கன் வாங்கியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் அதனை எடுத்துசென்று சாப்பிடுவதற்காக பிரித்துப் பார்த்தபோது அந்த சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக பார்சல் வாங்கிய உணவகத்திற்கு சென்றனர். மேலும் சிக்கனில் வண்டு இருந்ததாக கூறி அதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்து விளக்கம் கேட்டனர். ஆனால் உணவக ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த சட்டக்கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் செயலின் மூலமாக புகார் அளித்தனர். அதில் உணவக ஊழியர்கள் அளித்த விளக்கம் தொடர்பாகவும் பதிவிட்டு உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக் கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று உணவகத்தில் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் போது வண்டு இருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

    • மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
    • மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுக ளில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகி றார்கள். அவ்வாறு கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையின் கெடுபிடியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விரட்டியடிக்கும் இலங்கை கடற்படை வீரர்கள், சில சமயங்களில் கொடூர தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அதேபோல் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களையும் சிறை பிடித்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப் படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. அதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித் துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

    கண்ணை பறிக்கும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சிய வாறு வந்த கப்பலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், ஒலிபெருக்கி மூலம் இது இலங்கை கடற்பரப்பு. இந்த பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது. மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு மீனவர்கள் புறப்பட தயாரானார்கள்.

    மேலும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப முயன்றனர். அப்போது கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு வேகமாக மோதினர். இதில் நிலைகுலைந்த மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.

    உடனடியாக வேறு வழியின்றி படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு பேரும் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். பின்னர் இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

    இதற்கிடையே சற்று தொலைவில் மற்ற படகுகளில் மீன் பிடித்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது படகு மூழ்கியிருந்தது. கடலில் குதித்த மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    மேலும் இதுகுறித்து படகின் படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும், படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரியிடம் புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
    • வருகிற 4-ந் தேதி ஆடி அமாவாசை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மாதத்தில் 8 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் ஆடி அமாவாசை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்.

    இதையொட்டி சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்துள்ளனர்.

    இதற்கிடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இதய நோயாளிகள், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் ஊனமுற்றோர்கள், அதிக வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார்.
    • போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருமங்கலம்:

    கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருமங்கலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இன்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அது தோல்வியில் முடிந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் சுங்கச்சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
    • ஜாமின் கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    பிறகு, சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில், ஜாமின் வழங்க கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    • உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு.
    • மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி நாளை முதல் மீண்டும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம் என்றும், உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்துள்ளது.

    • தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம்.
    • தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக தான் நடத்தப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு வந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கப்படவில்லை. அப்போது தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களா?

    தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம். காவிரியை மீட்டெடுத்திருக்கலாம். மக்கள் பிரச்சனையை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் செங்கோலை பற்றி பேசுகிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி ஏன் பேசவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க. நடத்தும் நாடகம் வெகுநாள் எடுபடாது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    மதுரையில் 2 வாரத்தில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்.
    • டிஎன்பிஎல் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிசிசிஐ தன்னை புறக்கணிக்கிறதா, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "பிசிசிஐ-இல் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் இங்கு நடராஜனாக அமர்ந்து இருக்கிறேன். காயத்தால் என்னால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. நான் நல்ல முறையில் தயாராகி வருகிறேன். கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்."

    "பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்கள் ஒத்துழைப்பு இருந்ததால், தான் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, பலரும் டிஎன்பிஎல் போட்டிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎல் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது."

    "அதிகளவு இளம் வீரர்கள் ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎல்-இல் சிறப்பாக செயல்படுகின்றனர். டிஎன்பிஎல் மூலம் கிராமப்புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்பட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். கடின உழைப்புடன், எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    ×