search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே   2 குழந்தைகளின் தாய் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு
    X

    பண்ருட்டி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

    • மாமியார் ஏன் குழந்தைகளை அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
    • சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சுப்பு லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வேகாக்கொல்லை வடக்கு தெருவைசேர்ந்தவர் அசோக்குமார்.நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்பு லட்சுமி (28),இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.ஒரு மகன்ஒருமகள் உள்ளனர்.கடந்த 21-ந்தேதி காலை தனது குழந்தைகளை அடித்துள்ளார். இதனை அவருடைய மாமியார் ஏன் குழந்தைகளை அடிக்கி றாய்என்று கேட்டுள்ளார். அதனா ல்அன்று மாலை 2 மணிக்கு வேகாக்கொல்லையில் அவரது வீட்டில்எலி மருந்து தின்று விட்டார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருமாம் பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சுப்பு லட்சுமி சிகிச்சைபெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகி ச்சைஅளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பல னளி க்காமல்பரிதாபமாக உயிரிழந்தார்சுப்புலட்சுமி தற்கொலை குறித்து அவரது கணவனிடம் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்.இன்ஸ்பெ க்டர்பிரேம்குமார்மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணம் ஆகி 5ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சுப்புலட்சுமி மரணத்தில் கடலூர் ஆர்.டி.ஓ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×