search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பரமத்திவேலூரில் தெருக்களில் கேட்பாரின்றி நிற்கும் வெளிமாநில வாகனங்கள்
    X

    தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வெளி மாநில பதிவு கொண்ட கார்களை படத்தில் காணலாம்.

    பரமத்திவேலூரில் தெருக்களில் கேட்பாரின்றி நிற்கும் வெளிமாநில வாகனங்கள்

    • அம்மன் கோவிலில் முன்பு பல மாதங்களாக உரிமையாளர்கள் யார் என்றே, தெரியாமல் வெளி மாநில கார்கள் மற்றும் சரக்கு மினி ஆட்டோக்கள் நிற்கிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை, பகவதி அம்மன் கோவிலில் முன்பு பல மாதங்களாக உரிமையாளர்கள் யார் என்றே, தெரியாமல் வெளி மாநில கார்கள் மற்றும் சரக்கு மினி ஆட்டோக்கள் நிற்கிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வரும் நாட்களில் பள்ளி திறக்கும்போது இந்த வழியாக தனியார் பள்ளி பேருந்துகள் வந்து, செல்லும். வீதிகளில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் பள்ளி வாகனம் சென்று வருவதில் சிரமம் ஏற்படும்.

    மேலும் இரவு நேரத்தில் கார்களின் மறைவில் மர்ம நபர்கள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கமாக உள்ளது. கடந்த வருடம் இதே போல் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த உரிமையாளர்களை போலீசார் எச்சரித்து வாகனத்தை எடுக்கச் செய்தனர்.

    இந்த நிலையில், இப்பகுதியில் நிற்கும் வாகனங்களுக்கு ஆர்.சி மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லை என தெரிகிறது. இப்பகுதி மக்களுக்கு இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்றே தெரியவில்லை.

    எனவே பரமத்திவேலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×