search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில்  சரக்கு வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்
    X

    குமாரபாளையத்தில் சரக்கு வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

    • ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார்.
    • வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான சரக்கு வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரபாளையம் போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு சரக்கு வாகன டிரைவரான கிழக்கு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (28) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    Next Story
    ×