search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே 3 பேர் மாயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே 3 பேர் மாயம்

    • வேலைக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள லக்க சத்திரம் பகுதியை சேர்ந்தவர் திம்மக்கா (வயது 20).

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த திம்மக்கா கடந்த 19 -ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.

    இந்நிலையில் ஓசூர் பகுதியி சேர்ந்த சர்வேஷ் என்பவர் திம்மக்காவை கடத்தி சென்றுவிட்டதாக திம்மக்காவின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி அருகேயுள்ள கரடிக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. திம்மரெட்டிபகுதியை சேர்ந்த ராஜா (20) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    இதேபோல கிருஷ்ணகிரி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×