search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து நடவடிக்கை
    • தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    அருவங்காடு, 

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இதில் மண் மற்றும் மரங்கள் விழுந்தும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர் இதனிடையே குன்னூர் தீயணைப்புத் துறையினர் ஒன்றிணைந்து தனித்தனி குழுவாக பிரிந்து மீட்பு பணிகளில் நேரம் காலம் பாராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மலைப்பாதை மட்டு மல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இடர்பாடு களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    இதில் இன்று அதிகாலை 1 மணி அளவில் குன்னூர் பகுதியில் உள்ள புருக்லேண்ட்ஸ் பகுதியில் ராட்சத மரம் மின் கம்பி மீது சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    அந்த இருட்டு நிறைந்த நேரத்திலும் தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை அகற்றினர். இதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் மாறி மாறி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பந்தலூரில் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறை மும்முரம்
    • வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனா்.

    இதனால் அவர்கள் ஊருக்குள் திரியும் கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து பந்தலூா் வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் ரிச்மண்ட் பகுதியில் கூண்டு வைத்து கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
    • ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
    • பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அருவங்காடு:

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.

    பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.

    அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்
    • மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன்இருந்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நாக்குபெட்டா நலசங்க தலைவர் தும்மனட்டிபாபு தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.பி.ஏ தலைவர் தியாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்தை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன்இருந்தனர்.

    • சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் பிரதானசாலை துண்டிப்பு
    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் பெய்த கனமழை காரணமாக சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பிரதானசாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கரிக்கையூர், வக்கணமரம், மெட்டுக்கள், குடகூர், சாமகொடர் உள்பட 10 கிராமங்களுக்கு செல்லும் பஸ் சேவை தடைபட்டு உள்ளது. இதனால் அந்த கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்ககாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட பகுதிகளில் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நீலகிரி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், கீழ்கோத்திரி இளைஞர் அணி சிவனேசன் உடன் இருந்தனர்.

    • அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த போலீசார் வேண்டுகோள்
    • பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 21-வது வார்டில் போலீசார் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் சாகுல் மொய்தீன் ஆகியோர் கூட்டத்தில் பேசும்போது, அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாவலுக்கு கூர்க்காக்களை நிய மிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் பேசும்போது எங்கள் பகுதியில் இரவு-பகல் நேரங்களில் மப்டி யில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், சாலையோரங்களில் பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய வேண்டும், ஒரு வழிச்சாலையாக உள்ள மெயின் பஜாரை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. மேலும் அங்கு இரு சக்கர வாகனங்கள் அதி கவேகத்தில் இயக்குகின்றனர்.

    அதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    566 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்த கிரி வெள்ளநிவாரண மையத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டு 566 பயனாளிகளுக்கு, ரூ.3.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதனஒருபகுதியாக வருவாய்-பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் 12 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் 300 பேருக்கு ரூ.3 லட்சம் பெறுவதற்கான ஏ.டி.எம் கார்டுகள், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை யின்கீழ் 21 பேருக்கு ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 10 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் கடனுதவிகள், தோட்டக் கலைதுறை சார்பில் 14 பேருக்கு மானியவிலையில் ரூ.10.42 லட்சம் மதிப்பில் வேளாண்மை எந்திரங்கள் வழங்கப்பட்டது.

    ஆத்மா திட்டத்தின்கீழ் 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பில் விதைகள், முதல மைச்சரின் விரிவான மரு த்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் காப்பீட்டு அட்டைகள், மருத்துவம்-மக்கள் நலவாழ்வுதுறை சார்பில் 20 பேருக்கு மக்களைத்தேடி மருத்துவம் சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்ட கங்கள், 10 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    வேளாண் பொறியி யல்துறை சார்பில் 6 பேரு க்கு டிராக்டர்க ளுக்கான மானியதொகை ரூ.25.57 லட்சம், சுழல்கருவி வாங்கு வதற்கு ரூ.6.20 லட்சம், 5 பேருக்கு ரூ.49,600 மதிப்பில் தேயிலை பறிக்கும் எந்திரம், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 86 பேருக்கு ரூ.21.50 லட்சம் மதிப்பில் பத்திரங்கள், மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியி னர் நலத்துறை யின்கீழ் 3 பேருக்கு ரூ.16,740 மதிப்பில் தையல் மிஷின் கள், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் சுய உதவிகுழுவினருக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில் 10 பேருக்கு ரூ.4850 மதிப்பில் மடக்குகுச்சிகள், கருப்பு கண்ணாடி என மொத்தம் 566 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சரும், எம்.பி.யும் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கியில் கலை ஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இயக்குனர் சிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் வாஞ்சிநாதன், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷனகு மார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் இப்ராஹிம்ஷா, ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கல்பனா,மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் சசிகுமார் சக்கரபாணி, பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்நல அலுவலர் ராஜேஷ்குமார், ஆதிதிராவிடர்-பழங்குடி யினர் நல அலுவலர் செல்வகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்அமீத், மாவட்ட தொழில்மைய மேலாளர் சண்முகம் சிவா, மாவட்ட சமூக நல அலுவலர் பிர வீனா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • கோவையில் இருந்து 31 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் குன்னூருக்கு வருகை தந்துள்ளனர்.
    • செங்கல்புதூர் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 50 அடி அகலத்திற்கும் 20 அடி ஆழத்திற்கும் திடீரென நிலம் உள்வாங்கியது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மண் மற்றும் பாறைகள் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று இரவும் மழை பெய்தது. இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் அருகே திடீரென ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

    தகவல் கிடைத்தவுடன் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த வழித்தடத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும் மலைப்பாதையில் மண்சரிவு தொடர்வதால் 24 மணி நேரமும் போலீசார், நெடுஞ்சாலை, தீயணைப்பு, மருத்துவம், மற்றும் வருவாய் துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கோவையில் இருந்து 31 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் குன்னூருக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர் அருகே ஆனைப்பள்ளம் ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குரும்பர் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    நேற்று பெய்த கன மழையில் ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாமல் அவதியுற்று வருகின்றனர்.

    இதனிடையே செங்கல்புதூர் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 50 அடி அகலத்திற்கும் 20 அடி ஆழத்திற்கும் திடீரென நிலம் உள்வாங்கியது. இதனால் அங்குள்ள 22 ஆதிவாசி குடும்பங்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    இந்த தகவல் அறிந்ததும் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மூங்கில் மற்றும் கற்களைக் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து அங்குள்ள ஆதிவாசிகளை மீட்டு அருகில் உள்ள செங்கல்புதூர் கிராமத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

    இன்று காலை முதல் மீண்டும் மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் வாட்டி வதைக்கிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளை அறுவடை செய்ய இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போய் உள்ளனர். அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் நகர மட்டுமல்லாமல் கிராம பகுதிகளும் இருளில் மூழ்கி வருகிறது.

    • படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த பிரான்சிசை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    கூடலூர் மரப்பாலம் அடுத்த பால்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் அங்குள்ள அரசு தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு இவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதி முழுவதும் புதர்கள் மண்டி காணப்பட்டது.

    அப்போது அங்கு புதர் மறைவில் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது. புதராக இருந்ததால் பிரான்சிசுக்கு தெரியவில்லை. அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    திடீரென புதர்மறைவில் இருந்து யானை வெளியே வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் தப்பியோட முயன்றார். ஆனால் யானை அவரை துரத்தி சென்று, தூக்கி வீசி காலில் போட்டு மிதித்தது.

    இதில் படுகாயம் அடைந்த பிரான்சிஸ், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுப்பினார். அவரது அலறல் சத்தம்கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

    அப்போது அங்கு காட்டு யானை ஆக்ரோஷத்துடன் நிற்பதும், பிரான்சிஸ் படுகாயங்களுடன் கிடப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கூக்குரல் எழுப்பி காட்டு யானையை விரட்டி அடித்தனர்.

    பின்னர் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த பிரான்சிசை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரான்சிஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, பாலமேடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவரும் காட்டு விலங்குகளை உடனடியாக அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே கூலித்தொழிலாளி பிரான்சிஸை மிதித்து கொன்ற காட்டு யானையை கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.
    • சில இடங்களில் பாறைகள் விழும் நிலையிலும், மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    ஊட்டி:

    இயற்கை அழகுகள் மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்த நீலகிரிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்வார்கள்.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

    மழையால் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. மேலும், சில இடங்களில் பாறைகள் விழும் நிலையிலும், மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதனால், மழை ஓயும் வரை நீலகிரி மாவட்டத்திற்கு இவ்விரு வழித்தடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. குறிப்பாக, இரவு நேரங்களில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.

    இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    குறிப்பாக கோத்தகிரி, குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இங்குள்ள பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

    இதனால் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், நேரு பூங்கா, கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
    • கலைஞர் ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஊட்டி பிங்கர்போஸ்ட் திரேசா பள்ளி வளாகத்தில் நடந்தது. நகரசெயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக், துணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நீலகிரி எம்.பி. ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ப்ரீசர் பாக்ஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழக மக்களுக்கு கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரது ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    மேலும் மருத்துவ காப்பீடு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே நாம் அவருக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அணிகளின் அமைப்பாளர்கள் எல்க்ஹில் ரவி, தீபக், ஊட்டி நகர துணை செயலாளர் கார்ட்ன் கிருஷ்ணர், அவைத்தலைவர் ஜெயகோபி, கவுன்சிலர்கள் தம்பிஇஸ்மாயில், கீதா, வனிதா, செல்வராஜ், மேரிபுளோரினா, அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×