search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி துண்டுக்காடு அழகு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    X

    பண்ருட்டி அருகே துண்டுக்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரண்டிருந்த பக்தர்கள்.

    பண்ருட்டி துண்டுக்காடு அழகு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    • நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது.
    • நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அழகுமுத்து மாரியம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கணபதி, முருகன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான யாக சாலையில் நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை அனுக்ஞை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. மாலைஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், பஞ்சசூத்ர பாராயணம், நவக்கிரஹ பூஜை. நாடி சந்தானம், திரவிய ஹோமம், தேவாரம் திருவாசகம், மந்தாபுஷ்பம், பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை, லஷ்மி பூஜை, தன பூஜை, சாமிக்கு காப்பு கட்டுதல், தத்துவார்ச்சனை ரக்ஷாபந்தனம், ஸ்பர்ணாஹூதி, யாத்ரா தானம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று .

    10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி எனவிண் அதிர கோஷம் எழுப்பினர். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,கன்டோன்மென்ட் சண்முகம், சத்யா பன்னீர்செல்வம், பா.ம.க. மாவட்ட தலைவர் வடக்குத்து ஜெகன், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குபேரன், சாத்திப்பட்டு மதுராவில் உள்ள 16 கிராம மக்கள் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. இரவு வீதி உலா காட்சி நடக்கிறது. நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்காதை முன்னிட்டு காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×