search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சலக ஓய்வூதியர் குறைதீர்கூட்டம்
    X

    அஞ்சலக ஓய்வூதியர் குறைதீர்கூட்டம்

    • முதன்மை அஞ்சல் அதிகாரியால் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
    • காணொளி காட்சியின் உள்ளீட்டுக் குறியீடும், பாஸ்வேர்டும் ஓய்வூதியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய அளவிலான அஞ்சல ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற மார்ச் மாதம் நாளை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலக வளாகத்தில், முதன்மை அஞ்சல் அதிகாரியால் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.

    தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை என தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி-635 001 என்ற விலாசத்திற்கு வருகிற 24-ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களின் குறைகளை மின்னஞ்சல் முகவரிக்கும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குள் அனுப்பலாம்.

    ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் முழுமையாக குறிப்பிட வேண்டும் காணொளி காட்சியின் உள்ளீட்டுக் குறியீடும், பாஸ்வேர்டும் ஓய்வூதியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், ஓய்வூதியர்கள் தாங்கள் அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பானகுறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளைத் தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×