search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12-ந் தேதி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்
    X

    12-ந் தேதி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்

    • பாலிஸ்டர் நூல் கொண்டு தற்போது நடை முறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாது.
    • பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் நடப்பாண்டு சேலை உற்பத்திக்கான காட்டன் பாவு நூலுக்கு பதில், பாலிஸ்டர் நூல் தருவதாக அறிவித்துள்ளனர். பாலிஸ்டர் நூல் கொண்டு தற்போது நடை முறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாது. கைப்பாவில் மட்டும் குறைந்த அளவு பாவு ஓட்ட முடியும்.

    அனைத்து விசைத்தறிகளுக்கும் முழுமையாக பாவு நூல் வழங்க இயலாமல், விசைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். உரிய நேரத்தில் உற்பத்தி செய்து, பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்படும்.

    வெளி மாநிலங்களில் சேலையை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்பட்டு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தியும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    மேலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்திரம், திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, தோக்கவாடி, ராஜகவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சடையம்புதூர், கொல்லப்பட்டி, நெசவாளர் காலனி, வெப்படை, பள்ளிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×